குப்தாவின் தீர்க்க தரிசனம்
MTNL தோழர்களுக்கு ஓய்வூதியம் 
ஏறத்தாழ
 43000 MTNL ஊழியர்களின் மிக நீண்ட நாளாக  BSNLக்கு இணையான ஓய்வூதியம் தேவை
 என்று கோரி வருவது அனைவரும் அறிந்தததே. அதனை  தற்போது மத்திய அமைச்சரவை 
ஏற்றுக்கொண்டுள்ளது.. 
BSNL போலவே DOT மற்றும் MTNLலில் பணிபுரிந்த மொத்த சேவைக்காலதமும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அதனையும் சேர்த்து ஓய்வூதியம் வழங்கப்படும். 
ஓய்வூதியப்பங்களிப்பு
 PENSION CONTRIBUTION என்பது 31/12/2005 வரை IDA சம்பளத்தின் 
அதிகபட்சத்திலும் 01/01/2006க்குபின் ACTUAL PAY ஊழியர்கள் வாங்கிய 
சம்பளத்தின் அடிப்படையிலும் கணக்கீடு செய்யப்படும்.
இதற்காக ஓய்வூதிய விதி RULE 37Aல் 3 மாதங்களுக்குள் திருத்தம் கொண்டு வரப்படும் என அமைச்சரவை தெரிவித்துள்ளது.. 
இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 500 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.. 
இந்த ஓய்வூதியப்பலனை பெற MTNL ஊழியர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குப்தா முன்மொழிந்த யோசனை. ஏதாவது ஒன்றை இழந்தால் மட்டுமே மற்றொன்றை பெற முடியும் என அவர் நம்பினார்.
BSNL
 உருவாக்கத்தின் போது தோழர். குப்தா, ஓய்வூதியத்தை மட்டும் வாங்கி 
விட்டு MTNL போல உயர் சம்பளம் வாங்கத்தவறி விட்டார் என்ற குற்றச்சாட்டு 
பலமாக ஒலித்தது. ஆனால் உயர் சம்பளம் வேண்டாம் ஓய்வூதியமே போதும் என MTNL 
ஊழியர்கள் சரியான நிலை எடுத்து தங்களது கோரிக்கையை வென்றுள்ளனர். 
MTNL ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது அவர்களுக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு என்றால் மிகையாகாது.
 
No comments:
Post a Comment