Saturday 28 February 2015

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது தமிழ்மாநில மாநாடு இனிதே நிறைவு பெற்றது.
புதிய மாநிலச் செயலாளராக தோழர் இரா.முத்தரசன் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

 


இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நிறைவு பெறுவதையொட்டி விண்ணதிரும் கோஷத்துடன் துவங்கியது செம்படை பேரணி. 





 பொதுத்துறை நிறுவனமான BSNLஐ காக்க அனைத்து சங்கங்களும் 
17-03-15 அன்று  துவங்கவுள்ள 
வேலைநிறுத்த போராட்டத்திற்கு 
ஆதரவு தரும் தீர்மானத்தை 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில்முன்மொழிந்து உரையாற்றுகிறார் தோழர் C.K.M  
 

Sunday 22 February 2015

Implead Petition by CKM
நியாயத்திற்காக இறுதிவரை  போராடும் குணம் படைத்த 
தோழர் மதிவாணன், சென்னை 323 தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் தன்னையும் ஒரு பிரதிவாதியாக சேர்க்க்வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

Dinamani

"தயாநிதி மாறன் மீதான விசாரணையை  விரிவுபடுத்துவது அவசியம்'

First Published : 21 February 2015 03:23 AM IST
      தயாநிதி மாறன் மீதான விசாரணையை சி.பி.ஐ. விரிவுபடுத்த வேண்டும் என, தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனத்தின் மாநிலச் செயலரும், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள்- அலுவலர்கள் போராட்டக் குழுத் தலைவருமான சி.கே. மதிவாணன் கூறினார்.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:
 தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் 323 பி.எஸ்.என்.எல். இணைப்புகளை முறைகேடாகப் பெற்று, சன் டி.வி. பயன்பாட்டுக்கு அளித்ததால், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ. 440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதை சி.பி.ஐ.தெளிவுபடுத்தி யுள்ளது. எனவே, சன் டி.வி. நிர்வாகத்திடமிருந்து ரூ.440 கோடியை அரசு வாங்கித் தர வேண்டும்.
சன் டி.வி. நிர்வாகத்தின் சேனல்கள் ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் உள்ளன. எனவே, அங்கும் தயாநிதி மாறன் முறைகேடு செய்யாமல் இருந்திருப்பார் என நம்புவதற்கான முகாந்திரம் இல்லை. எனவே, சி.பி.ஐ. தனது விசாரணை வரம்பை விரிவு படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கில் எங்களது சங்கத்தைச் சேர்ந்தவர்களையும் ஒருதரப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீரழிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இதை கண்டித்து, மார்ச் 17-ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கவுள்ளோம் என்றார்.
clip

Saturday 21 February 2015

சென்னை ,தமிழ்நாடு NFTE(BSNL), தொழிலாளர் கல்விமையம் ,

NFTCL அமைப்புகளின் சார்பாக ,500 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள்

பங்கேற்ற தோழர் ,C K மதிவாணன் தலைமை தாங்கிய, மீத்தேன்

வாயு திட்டத்தை கைவிடக்கோரி,மாபெரும் தொடர் முழக்க 

போராட்டம், தஞ்சை மண்ணை அதிரவைத்தது ....

இந்த மக்களைக் காக்க, தஞ்சை மண்ணை காக்க நடந்த போராட்டத்தில் 

திருவண்ணாமலையின் சார்பில் தோழர்கள் இரா. செல்வராஜு மற்றும் 

தோழர் பொன். தேவராஜு கந்துகொண்டனர். 







            























Saturday 14 February 2015

மண்ணில் மீண்டும் பிறப்பீர்களா எங்கள் அருமை குப்தாவே! எங்கள் மாசற்ற ஜெகன் அவர்களே!


Image result for gupta jagan nfte-bsnl
  
  எங்கள் ஆசான் அருமைத்தோழர் ஜெகன் அவர்கள் பல கூட்டங்களில் சொல்லக்  கேட்டுருக்கின்றேன்.

  "ஒரு மாபெரும் கூட்டம் நடந்தது,    ஒரு தோழன்,  காசுவல் ஊழியர்  எழுந்து அருமைத் தோழர் குப்தா அவர்களிடம் கேள்வி கேட்கின்றார்  " எங்களுக்கு என்ன செய்தது இந்த சங்கம் ",
   
    அருமைத் தோழர் குப்தா அமைதியாக விளக்குகின்றார் அந்த தோழருக்கு."  ஒரு மிகப்பெரிய சங்கத்தின்  சம்மேளனப்பொதுச் செயலரிடம்  கேள்வி கேட்கும் உரிமையை இந்த சங்கம் உங்களுக்கு கொடுத்துள்ளது".

    கேள்வி கேட்டதோ ஒரு காசுவல் ஊழியர்!

    பதிலுரைத்த தோழர் குப்தாவின் பாங்கை என்னவென்று உரைப்பது.

ஆனால்,  ஆனால்,  இன்றோ !    கேள்வி கேட்டால்? 

   குப்பையை தூக்கி எறி? என எகிறும் "காரை குடியான்" கள்.

  " 3 பேர் கேள்வி கேட்கிறான், எண்ணிக்கை சிறிது தான் அப்புறப் படுத்து"
    என திமிர் பேசும் கும்பகோணத்தாண் கள்,
   கோஷமிட்டால், ரவுடிகள் என விமர்சிக்கும் மறைமுக    எழுத்தாளர்   வேலூர் அந்துமணிகள். (தினமலரில் முகம் காட்டாத ஆசிரியர்).

   "மதுரைக்கு வந்தால் காலை  உடைப்பேன்" என திமிர் பேசும்
   மதுரைக்கார துணை அண்ணாச்சி,

   மனதில் மீண்டும் மீண்டும் ஆசை பிறக்கிறது,

மண்ணில் மீண்டும் பிறப்பார்களா எங்களது ஆசான்கள் குப்தாவும், ஜெகனும்.

From NFTE-CBT

Friday 13 February 2015

குண்டர்கள் அல்ல ! அணுக்கத்தொண்டர்கள் !!
குப்பைகள் அல்ல ! சங்கம் காக்கும்  கோமேதகங்கள் !!! 


சென்னை தொலைபேசி மாவட்ட சங்கத்திற்கும் தமிழ் மாநில சங்கத்திற்குமிடையே ஒருங்கினைப்பு  அதிகரிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஜபல்பூர் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட  சென்னை தொலைபேசி மற்றும் தமிழ் மாநில சங்கங்களைச் சார்ந்த புதிய அகில இந்திய சங்க நிர்வாகிகளுக்கு பிரம்மாண்டமான பாராட்டு விழாவினை ஏற்பாடு  செய்து பெருந்தன்மையோடு அதற்கு தமிழ் மாநிலச் செயலர்  பட்டாபிராமனையும் அழைத்தார் தோழர் மதிவாணன். 

ஆனால் பட்டபிராமனின் ரகசிய திட்டமோ ஓற்றுமையே வரக் கூடாது என்பதுதான். அதனால்தான், சேலத்தில் அதைவிட பிரம்மாண்டமான விளக்க  கூட்டத்தில் பங்கேற்கப் போகிறேன் என்று சாக்கு போக்கு சொல்லி அந்த கூட்டத்திற்கு வராமல் ஒதுங்கி நின்றார். 

 தனது நம்பிக்கைகுரிய மூத்த தோழன் சொன்ன அறிவுரையை புறந்தள்ளினார். ஒற்றுமை வராமல் இருக்க,    சென்னை  தொலைபேசி  மாநில சங்கத்தை வம்புக்கு இழுத்து, பிரச்னைகளை உருவாக்கி, பிளவை நிரந்தரமாக்குவதற்காகத்தான்  மதுரையில் STR  கூட்டத்தை நடத்தி சென்னை தொலைபேசியைச் சார்ந்த அன்பழகனை மாவட்டச்  செயலராக்கினார்  பட்டாபிராமன்.

பல மாதங்கள் பொறுமை காத்த சென்னை தொலைபேசி மாநிலத் தோழர்கள், தமிழ் மாநில சங்க செயற்குழுவிற்கு நியாயம் கேட்டு வந்தார்கள்.  சங்கத்தை காக்கும் அந்த அணுக்கத் தொண்டர்களை குண்டர்கள் என்று வேலுர் வெப் சைட்டில் எழுதியுள்ளனர். 

குப்பைகள் என்று காரைக்குடியார் பகன்றுள்ளார்.

 அவர்கள் குண்டர்களாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்...........

    சிறிது யோசித்துப் பார்ப்போம் ! 

அரங்கத்திலிருந்தவர்கள் அடிவாங்காமல்  இருந்திருப்பார்களா ?

பல மண்டைகள் உடைந்திருக்காதா !!  

காயமின்றி அனைவரும் ஊர் திரும்பி இருக்க முடியுமா !? 

காவல் துறையினரை அழைத்தது யார் ? பட்டாபிராமன்  மற்றும் முரளி தானே !

காவல் துறையினரிடம் முரளி மூக்குடைபட்டது  மறந்து விட்டதா !? 

பிரச்னையை புரிந்து கொண்ட  சர்க்கிள் இன்ஸ்பெக்டர் " சென்னை தோழர்கள்  தவறாக எதுவும் செய்யவில்லை ! சென்னைக்காரரை (அன்பழகனை)  நீங்கள் வெளியேற்றினால் அவர்கள் அமைதியாக சென்றுவிடுவார்கள் !! " என்று கூறிவிட்டு போலீஸ்காரர்களை  திரும்ப  அழைத்துச் சென்று விட்டார்  !

காரைக் குடி யார் எழுதிய வரிகள்:  

" பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து குப்பைகளை வெளியில் தள்ளிய கோபம் சொல்வதா?.."..


குப்பைகளை வெளியேற்றினோம் என்று கூறி உண்மையை உடைத்து விட்டார் காரைக் குடி யார் !

அந்த 70 பேர் உண்மையிலேயே குண்டர்களாக  , இருந்திருந்தால்,

மதுரை தோழர்களாலேயே விரட்டி அடிக்கப்பட்ட இரண்டெழுத்துவில்லன்  ஜாடை காட்டிய பிறகு, காரைக்குடியார், ,நாகர்கோவில்  ஜோசப்,  கடலூர் இளங்கோ போன்ற சிலரால் " அவர்களை  குப்பைகளைப் போல தள்ளினோம்"  என்று காரைக் குடியார் எழுதியுள்ளாரே !! அது  நடந்திருக்குமா! சாத்தியப்பட்டிருக்குமா !!

கெட்டிக்காரன் புழுகு எட்டே நாள் என்பதுபோல, வேலூர்காரரின் 
புழுகை தோலுறித்து காரைக் குடி யாரே, தன்னை அறியாமல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்... 

அவர்கள் குண்டர்கள் அல்ல ! குப்பைகள் என்று !!

நம்மை பொறுத்தவரை அந்த 70 பேர் உண்மையிலேயே குப்பைகள் அல்ல 
                          சங்கம் காக்கும்  கோமேதகங்கள்  !!

நன்றி: NFTE-கோவை.
மீத்தேன் எரிவாயு திட்டம் கைவிடக்கோரி போராட்டம்
      காற்றில் பறக்கும்  தமிழக பாரம்பரியம் !
                                    ( நூரு போயி லட்சம்  )

தமிழகத்தில் E-3  மற்றும் Line staff and Group D சங்கங்கள் இணைந்து NFTE-BSNL உருவான போது நாம் ஒரு கொள்கை நிலைபாட்டை உருவாக்கினோம். 

மாநிலச் செயலர்  E-3 தோழர் என்றால் மாநிலத் தலைவர் போன் மெக்கானிக் தோழர் என்று.

2003ல், திருநெல்வேலி மாநில மாநாட்டின்போது, போன் மெக்கானிக் தோழர்தான் மாநிலச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் 
என்று பிரச்சாரம் செய்தனர் பட்டாபி  அணியினர் .

2007ல், கோவை மாநில மாநாட்டில் பட்டாபிராமன்  மாநிலச் செயலர் என்றவுடன் அந்த நிலைபாட்டை அம்போ என்று விட்டுவிட்டு  தலைவர் லைன் ஸ்டாப் என்றனர்.

மதுரை மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சேலம் மாவட்டச் சங்க  நில அபகரிப்பு புகழ் நூருக்கு பதிலாக  லட்சம் என்று சென்னையில் பூட்டிய அறையில்  முடிவெடுத்ததாக அறிவித்துள்ளனர்.

 இது ஜனநாயகரீதியாக நடந்த தேர்தல் அல்ல. கோஷ்டி முடிவு !!

  பட்டாபி அணியிலேயே கூட நல்ல தரம் வாய்ந்த போன் மெக்கானிக் தோழர் ராப்ர்ட்ஸ் உள்ளார். 

1982ல் சேலம் மாநில மாநாட்டில் தோழர் சி.கே.,மதிவாணன் அவர்களால் அடையாளம் காணப்பட்டு மாநில சங்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப் பட்டவர், மாவட்டச் செயலராக, மாவட்டத் தலைவராக, மாவட்ட பொருளராக  என்று  பல பொறுப்புகளை ஏற்ற அனுபவம் வாய்ந்த நிதானமான தோழர் அவர்.

ஒற்றுமைக்கு குரல் கொடுக்கும் அவரை ஓரம் கட்டி விட்டு,  டெலிபோன் ஆபரேட்டரான, விரைவில் ஓய்வு பெறப் போகும் லட்சத்தை நியமிப்பது ஏன் ? மாநிலச் செயலர் பட்டாபிராமனும் டெலிபோன் ஆபரேட்டர்,  லட்சமும் டெலிபோன் ஆபரேட்டர். இது கேடர் உணர்வை கிளப்பி விடாதா ?

  மாநில துணைத் தலைவராக இருக்கும்போதே, மூத்த தோழர் கோவை சுப்பராயன் அவர்களை சென்னை செயற்குழுக் கூட்டத்தில்," மதுரை வரும்போது கையையும்  காலையும் உடைப்பேன்"  என்று 
மதுரை முத்து பாணியில் மிரட்டிய லட்சம்,  தலைவரானால் எப்படி நர்த்தனம் ஆடுவார் !

 எந்த நிலப் பிரச்சனைக்காக நூரு விலகினாரோ, அதே தவறுக்கு  உடந்தையாக இருந்தவருக்கு துணைச் செயலர் பதவியா ! . 

தகவல்: NFTE-கோவை.

Wednesday 11 February 2015

10-02-2015ல்  சென்னையில் நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழுவில் நடந்தது என்ன?
 மாநிலச் செயலர் Com.பட்டாபி   அவர்களின்     உண்மை சொரூபம் என்ன?

காண இங்கே கிளிக் செய்து பார்த்து படித்து தமிழகத் தோழர்களுக்கு
விநியோகம் செய்து சங்கத்தை காக்க வேண்டுகிறோம்.

தகவல்: NFTE-கோவை