|  | 
- 
ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக 
வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் 
போன்று வீறுகொண்டெழுமின்.
 
- 
வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். 
யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், 
நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான். 
 
- 
எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் 
இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி 
ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன். 
 
- 
நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் 
அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர 
வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை. 
 
- 
சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் 
ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால், மக்களின் நல்வாழ்விற்கான 
திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே உண்மையான ஜனநாயகம் ஆகும். 
 
- 
உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க 
முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த 
கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள். 
 
- 
ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக 
விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள். 
 
- 
சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய 
நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர். 
 
- 
முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை 
அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, 
சிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.
 
 
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment