Friday 25 October 2013


We appreciate the Immediate Response   

                                  

23-10-2013 : Corporate office issued clarification on wightage point system to compassionate ground appointments. Letter No.-273-18/2005-Pers.IV. Dated:-22-10-2013. Click Here

சுடச் சுட 

18-10-13 அன்று டெல்லி சென்றிருந்த நமது துணைப் பொதுச்செயலர் தோழர் சி.கே.மதிவாணன் அவர்கள், அகில இந்திய தலைவர் தோழர் இஸ்லாம் அகமது அவர்களுடன் சென்று BSNLன் பல முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஊழியர்களின் பல முக்கிய பிரச்னைகளை விவாதித்தார்.

திரு நிரஜ் வர்மா Sr. GM (SR) அவர்களிடம் சென்னை தொலைபேசி மாநிலத்தில் கருணை பணி பற்றி பரிசீலிப்பதில் பல குழப்பங்கள் உள்ளதை விவாதித்துள்ளார்.

இறந்த ஊழியரின் அப்போதைய குடும்ப சூழ்நிலையை கணக்கில் கொள்ளாமல், புதிய பென்சன் அடிப்படையில் Weightage pointஐ கணக்கீடு செய்வது தவறு என்றும் அழுத்தந்திருத்தமாக வாதிட்டுள்ளார். 

தோழர் மதிவாணன் அவர்களின் வாதத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து கொண்ட அந்த மூத்த அதிகாரி, உடனடியாக ஒரு மாற்று உத்திரவை வெளியிட்டுள்ளார். அவருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.அந்த உத்திரவு மூலம் இந்தியா முழுமையிலும் உள்ள பல நூறு பாதிக்கப் பட்ட குடும்பங்களின் வாரிசுகள் கருணைப் பணி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனக்கு கிடைத்த அங்கீகாரத்தை பயன்படுத்தி ஊழியர் பிரச்னைகளை NFTE-BSNL தீர்க்கும் இவ்வேளையில், தான்தான் முதன்மை அங்கீகாரச் சங்கம், எங்களுக்கு கமிட்டிகளில் விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வேண்டும், எப்படியாவது எங்கள் கூட்டணி சங்கத்தாருக்கு, சட்டத்தை மீறியாவது கவுன்சில்களில் பதவி தரவேண்டும் என்று செயல்பட்டு கொண்டிருக்கிறது BSNLEU.

நன்றி: NFTE காஞ்சிபுரம்

No comments:

Post a Comment