Monday 28 October 2013


தீபாவ(லி)ளி

இந்திய தேசத்தின் மிகப்பெரும் விழாவான தீபாவளித்திருநாள் 
நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் உழைக்கின்ற  
ஊழியர்களின் உள்ளமோ நொறுங்கிக்கொண்டிருக்கின்றது.  

3 ஆண்டுகளாக போனஸ் இல்லை. 
அந்த வரிசையில் இந்த ஆண்டும் சேர்ந்திடுமோ? 
என்ற கேள்வி எழுகின்றது. 

அமெரிக்க அரசு இந்திய மக்களின் கலாச்சார உணர்வுகளுக்கு 
மதிப்பளிக்கும் வகையில் தீபாவளியைக் கொண்டாட தயாராகி 
வருகின்றது. ஆனால் இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறையின் 
CMDயோ  ஊழியர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் 
உரிமையான போனசை அறிவிப்பதை விடுத்து,  நிதி நிலையைக்
காரணம் காட்டி போனசை மறுத்து வருகின்றார். 

மருத்துவப்படியை நிறுத்தியதால் 400 கோடி, 
LTCஐ நிறுத்தியதால் 100 கோடி, 
78.2 நிலுவையை பறித்ததால் 1000 கோடி 
என்று ஊழியர் உரிமையைப்பறித்த  CMD வெறும் 70 கோடி 
செலவாகும் போனசை மறுப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?..

இதே ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 18 கோடியை உத்தரகண்ட் 
வெள்ள நிவாரணத்திற்கு அள்ளி வழங்கியதை மறக்க முடியுமா? 
மொத்தத்தில் BSNL நிர்வாகம் ஊழியர்களின் உணர்வுகளை மதிக்க 
தவறி விட்டது. போனஸ்  என்பது லாபம் நட்டம் சார்ந்ததல்ல. 

அது இந்த தேசத்தின் பண்பாடு சார்ந்தது. எனவே போனஸ் மறுப்பு 
என்பது பண்பாடற்ற செயலாகவே கருதப்படுகின்றது. 

ஊழியருக்கு போனஸ் என்ற உரிமையை பெற்றுத்தந்த NFTE 
பேரியக்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் போனசை பெறுவதற்கு 
தனது முயற்சியை தொடர்ந்து செய்து வந்தது. 

இந்த ஆண்டு மீண்டும் அங்கீகாரம்  கிடைத்திருப்பதால் கூடுதல் 
பொறுப்புடன் போனசைப் பெற கடமையுணர்வுடன் செயலாற்றி 
வருகின்றது. 

தோழர்களே !..போனஸ் நமது உரிமை என்ற குரலை ஓங்கி 
ஒலிப்போம். BSNL ஊழியர்கள் போனஸ் தேசத்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் என்னும் நிலை மாற்றுவோம். அக்டோபர் 30 உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக்குவோம்.

   From Tamil Nadu circle union Web site   

மோடிக்கு வழி நடத்தும் திறன் இல்லை: நியூயார்க் டைம்ஸ்!



மோடிக்கு வழி நடத்தும் திறன் இல்லை: நியூயார்க் டைம்ஸ்!

'பெரும்பாலான இந்தியரிடம் பயம் மற்றும் விரோதத்தை விதைப்பதால் மோடியால் நாட்டை சிறப்பாக வழி நடத்த முடியாது என்று பிரபல அமெரிக்க ஏடான நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

மோடி பற்றி சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ள நியுயார்க் டைம்ஸ், பிரதமர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள மோடியால் இந்தியாவை வழி நடத்த இயலுமா? என்று அலசியது.

ஆசிரியர் குழுவின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் "மோடி பிற எதிர்கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்றவோ, பிறரின் அபிப்ராயங்களை சகித்துக் கொள்ளவோ எந்தவித முயற்சியும் எடுப்பதில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில் ஏழ்மை சதவீதம் குறைவு என்றாலும் நாட்டின் ஏழ்மை மிகுந்த முஸ்லிம்கள் அங்கே தான் உள்ளனர் என்றும், குஜராத்தின் பொருளாதார நிலை சிறபாக இல்லை என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

138 மில்லியன் முஸ்லிம்கள், சிறுபான்மையினர், மற்றும் தாழ்த்தப்பட்டவர் மோடி பிரதமர் ஆவதை விரும்பவில்லை என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.'

- டைம் பத்திரிக்கை மோடியைப் புகழ்ந்து எழுதியதற்காக பட்டாசு வெடித்துக் கொண்டாடியவர்கள், நியூயார்க் டைம்ஸின் இந்தக் கட்டுரைக்கு என்ன பதில் சொல்வார்கள்?

தகவல்: NFTE கோவை




இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இடதுசாரி கட்சிகள்
பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்திமைதானத்தில் மாபெரும் பேரணி - பொதுக்கூட்டம் நடத்தினார்கள்.

செங்கடலாய் கூடியுள்ள கூட்டத்தைப்
பாருங்கள். இந்த செய்தியை எந்தத் தொலைக்காட்சியிலாவது
அல்லது எந்தப் பத்திரிக்கையிலாவது பார்த்திருப்பீர்களா...?

மோடியின் கூட்டத்தையும், ராகுலின் கூட்டத்தையும் மட்டுமே
திட்டமிட்டு காட்டுகிற ஊடகங்களின் கண்களுக்கு அல்லது
காமிராக்களுக்கு இடதுசாரிக் கட்சிகளின் கூட்டம் மட்டும்
தெரிவதில்லையா...? இது நியாயம் தானா...?

இது தான் ஊடக தர்மமா...? அல்லது இவர்கள் ஆட்சிக்கு
வந்துவிடப்போகிறார்கள் என்ற பயமா..?


என்ன தோழர் இதுக்கெல்லாம் ஆதங்கப் படுறீங்க  .இந்த படத்தைக் காட்டி
இது மோடிக்கு வந்த கூட்டம்னு சொல்லாம விட்டாங்களே அதுக்காக சந்தோசப் படுங்க!

தகவல்: NFTE கஞ்சிபுரம்
BSNL VIGILANCE AWARENESS WEEK
(28-10-2013 TO 02-11-2013)
திருவண்ணாமலை தொலைபேசி நிலையத்தில்
BSNL VIGILANCE AWARENESS WEEK

இன்று (28-10-2013) 11.00 மணியளவில் நடைபெற்றது. திரு. T.பொன்னிவளவன் SDE அவர்கள் வாசிக்க மற்ற ஊழியர்கள் பின்தொடர்ந்து  உறுதிமொழி வாசித்தனர்



Friday 25 October 2013


We appreciate the Immediate Response   

                                  

23-10-2013 : Corporate office issued clarification on wightage point system to compassionate ground appointments. Letter No.-273-18/2005-Pers.IV. Dated:-22-10-2013. Click Here

சுடச் சுட 

18-10-13 அன்று டெல்லி சென்றிருந்த நமது துணைப் பொதுச்செயலர் தோழர் சி.கே.மதிவாணன் அவர்கள், அகில இந்திய தலைவர் தோழர் இஸ்லாம் அகமது அவர்களுடன் சென்று BSNLன் பல முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஊழியர்களின் பல முக்கிய பிரச்னைகளை விவாதித்தார்.

திரு நிரஜ் வர்மா Sr. GM (SR) அவர்களிடம் சென்னை தொலைபேசி மாநிலத்தில் கருணை பணி பற்றி பரிசீலிப்பதில் பல குழப்பங்கள் உள்ளதை விவாதித்துள்ளார்.

இறந்த ஊழியரின் அப்போதைய குடும்ப சூழ்நிலையை கணக்கில் கொள்ளாமல், புதிய பென்சன் அடிப்படையில் Weightage pointஐ கணக்கீடு செய்வது தவறு என்றும் அழுத்தந்திருத்தமாக வாதிட்டுள்ளார். 

தோழர் மதிவாணன் அவர்களின் வாதத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து கொண்ட அந்த மூத்த அதிகாரி, உடனடியாக ஒரு மாற்று உத்திரவை வெளியிட்டுள்ளார். அவருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.அந்த உத்திரவு மூலம் இந்தியா முழுமையிலும் உள்ள பல நூறு பாதிக்கப் பட்ட குடும்பங்களின் வாரிசுகள் கருணைப் பணி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனக்கு கிடைத்த அங்கீகாரத்தை பயன்படுத்தி ஊழியர் பிரச்னைகளை NFTE-BSNL தீர்க்கும் இவ்வேளையில், தான்தான் முதன்மை அங்கீகாரச் சங்கம், எங்களுக்கு கமிட்டிகளில் விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வேண்டும், எப்படியாவது எங்கள் கூட்டணி சங்கத்தாருக்கு, சட்டத்தை மீறியாவது கவுன்சில்களில் பதவி தரவேண்டும் என்று செயல்பட்டு கொண்டிருக்கிறது BSNLEU.

நன்றி: NFTE காஞ்சிபுரம்

78.2 நிலுவை வழங்க கோரி DOT SECRETARY க்கு CMD-BSNL  கடிதம் படிக்க

imggallery

Wednesday 23 October 2013

   NFTE-BSNL தலைமை அறைகூவல்

                                     


             அக்டோபர் 30 அன்று

       போனஸ் வழங்கக் கோரி 

தலைநகர் புது தில்லி,மாநிலம்,மாவட்டங்களில் 

தலைவர்,செயலர்   உண்ணாவிரதப் போராட்டம்.

போராட்ட கலத்தில் இறங்குவோம்.

 வெற்றிக்கனியை பறிப்போம்.-----------------------------------------------------------------
              முக்கிய உத்திரவுகள் :

கருணைப் பணி பற்றி

கருணைப் பணிக்கு இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர் விண்ணப்பத்தை பரிசீலிக்க தகுதி நிர்ண்யம் செய்யும் Weightage points கணக்கிடும்போது 2007க்கு முன் பெற்ற பழைய பென்சன் தொகையை கணக்கில் கொள்ள வேண்டும். 

23-10-2013 : Corporate office issued clarification on wightage point system to compassionate ground appointments. Letter No.-273-18/2005-Pers.IV. Dated:-22-10-2013. 

JTO பயிற்சி :
  ஏற்கனவே JTO பயிற்சி முடித்து JTOவாக Officiating செய்பவர்கள், 2013ல் நடந்த JTO தேர்வில் வென்றிருந்தால் Phase I traing செல்லவேண்டும் . 



23-10-2013 : Training of officiating JTO's who have qualified the LICE for the promotion from TTA to JTO held in 2013. Letter No.-5-3/2012-Pers-IV(Pt), Dated:-23-10-2013. 

Tuesday 22 October 2013

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு தகுதி நீக்கம்.


கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலுபிரசாத் யாதவ் எம்.பி. பதவி வகிப்பதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள், உடனடியாக தங்களின் பதவியை இழப்பார்கள் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி லாலுபிரசாத் யாதவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று, குற்ற வழக்கில் தண்டனை பெற்ற காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ரஷீத் மசூத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி எம்.பி. பதவி இழந்த முதல் அரசியல்வாதி ஆனார்.
இதன் தொடர்ச்சியாக, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி.க்களான லாலு பிரசாத் யாதவ், ஜகதீஷ் ஷர்மா ஆகியோர் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவசரச் சட்டம்
வழக்குகளில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தண்டனை பெற்றாலும், அவர்கள் உயர் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்த பின், தங்களின் பதவியில் தொடரலாம் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த ஷரத்தை நீக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 10-ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள், உடனடியாக தங்களின் பதவியை இழப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த அவசரச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், அவசரச் சட்டம் ஒன்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரத்தில் தலையிட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அந்த அவசரச் சட்டத்தைக் கிழித்து எறிய வேண்டும் என்று வெகுண்டெழுந்தார். அதன் தொடர்ச்சியாக, அந்த அவசரச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது.


கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கியது.
இன்று அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கியதாகவும், முதல்கட்டமாக 75 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார். மேலும், மின் உற்பத்தி படிப்படியாக உயர்த்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாஸ்கோவில் நடைபெறும் இந்திய - ரஷ்ய 14-வது உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விடுத்த அழைப்பை ஏற்று மன்மோகன் சிங் மாஸ்கோ சென்றுள்ள நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, ரஷ்யா கூட்டு முயற்சியில், கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் 2011ம் ஆண்டு இறுதியில் கூடங்குளத்தில் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அணுமின் நிலையத்தின் ஆயத்தப் பணிகள் தாமதமானதை அடுத்து மின் உற்பத்தியை துவக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
கூடங்குளமும் இடிந்தகரை போராட்டமும்:
இதற்கிடையில், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரை கடலோர கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமர் தலைமையில் போராட்டங்கள் வலுத்தன. அணு உலை பாதுகாப்பானது அல்ல, கொதி நீர் கடலில் சேர்வதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும், பேரிடர் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து போராட்டங்கள் நடை பெற்றன. இதனால், அணு மின் நிலைய பணிகள் மேலும் தாமதமானது.
இதனைத் தொடர்ந்து அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு கூடங்குளத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் கூடங்குளத்தில் பணிகள் தொடங்கின.
மின் உற்பத்தி இப்போது தொடங்கும், அப்போது தொடங்கும் என பல்வேறு நேரங்களில் கூறப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
உதயகுமார் கருத்து:
கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கியது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமர் : இதற்கு முன்னர் பல முறை இதே போல் அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் அப்போது எல்லாம் உண்மையில், மின் உற்பத்தி தொடங்கவில்லை. இன்று மின் உற்பத்தி தொடங்கி இருப்பதாக கூறப்படுவதும் எவ்வளவு தூரம் உண்மையானது என்பது தெரியவில்லை. மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்னும் அணு மின் நிலைய பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாக தெரிவிக்கப்படவில்லை என தகவல். 

                                      அதற்குள்ளேயே கூச்சல் ஏன்?


இந்தியாவில் பெருநிறுவனங்கள் ஆடும் சூதாட்டத்துக்கு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு 
முறைகேடு மேலும் ஓர் உதாரணம்.
ஒடிசாவின் சம்பல்பூரில் இரு நிலக்கரிச் சுரங்கங்களைத் தன்னுடைய ‘
ஹிண்டால்கோ’ நிறுவனத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று கடந்த 2005-ல் பிரதமர் 
சிங்குக்கு இரு கடிதங்களை எழுதினார் ‘ஆதித்ய பிர்லா குழும’த் தலைவர் குமார் 
மங்கலம் பிர்லா. இந்தச் சுரங்கங்கள் பொதுத்துறை நிறுவனங்களான மகாநதி 
மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படவிருந்தவை. 
பிர்லாவின் கோரிக்கை தொடர்பாக, நிலக்கரித் துறையிடம் பிரதமர் கேட்டபோது, 
இந்த விஷயத்தை பிரதமருக்கு நிலக்கரித் துறை தெரிவித்துவிட்டது. தொடர்ந்து,
 ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ‘ஹிண்டால்கோ’வுக்கு அந்தச் சுரங்கங்களை 
ஒதுக்கப் பரிந்துரைத்து பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். இதனிடையே 
நிலக்கரித் துறைச் செயலரை இரு முறை சந்தித்தார் பிர்லா. பிரதமர் மீண்டும் 
இது தொடர்பாக நிலக்கரித் துறையிடம் விளக்கம் கேட்க, ‘ஹிண்டால்கோ’வுக்கும் 
ஒதுக்கீடு கிடைத்தது. அதுவும் பொதுத்துறை நிறுவனங்களுடனான 
‘ஹிண்டால்கோ’வின் இந்தப் பகிர்வு, முறையான அனுமதிகள் - ஒப்புதல்கள், 
அரசாணை வெளியீடு ஏதுமில்லாமல், நிலக்கரித் துறைச் செயலரின் கருத்துருவை அடிப்படையாகக் கொண்டு நடந்திருக்கிறது.
அப்பட்டமாக, பிர்லாவின் லாபியை வெளிப்படுத்துகிறது இந்த ஒதுக்கீடு. ஆனால், 
இத்தனை ஆண்டுகளாக எதுவுமே நடக்கவில்லை. உச்ச நீதிமன்றக் கெடுபிடியால், 
1993 முதலான நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடுகளை விசாரிக்கும் சி.பி.ஐ.,
 கடந்த 16-ம் தேதி பிர்லா மீதும் அவருடைய ‘ஹிண்டால்கோ’நிறுவனம் மீதும் 
வழக்குப் பதிந்தது. ஆரம்பித்துவிட்டது கூச்சல். "பிர்லாவின் நேர்மையை எவரும் 
சந்தேகிக்க முடியாது" என்கிறார் அமைச்சர் ஆனந்த் ஷர்மா. "இது தவறான சமிக்ஞை" என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி. "நாடு பொருளாதார 
நெருக்கடியைச் சந்தித்துவரும் காலகட்டத்தில், 40 நாடுகளில் வர்த்தகத்தில்
 ஈடுபட்டிருக்கும் முன்னணித் தொழிலதிபர் மீதான இந்நடவடிக்கை 
முதலீட்டாளர்களின் உணர்வுகளை பாதிக்கும்" என்கிறது இந்தியத் 
தொழில்துறை. "வர்த்தக நிறுவனத் தலைவர்களை பலிகடாவாக்கக் கூடாது" 
என்கிறது வர்த்தக அமைப்பான ‘ஃபிக்கி’.
நாட்டின் பெருநிறுவனங்கள் ‘டாடா’, ‘ரிலையன்ஸ்’, ‘ஜிண்டால்’எனப் பலவும்
 இன்று பெரும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றன. மூன்று நாட்களுக்கு 
முன்புகூட 'பெருநிறுவனங்களும் அரசு நிர்வாகிகளும் தீய நோக்கத்துடன் 
கூட்டுசேர்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதை ராடியா உரையாடல்கள் காட்டு
கின்றன' என்று குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். "வழக்கில் பிரதமரையும் 
சேருங்கள்" என்கிறார் முன்னாள் நிலக்கரித் துறைச் செயலர் பரேக். 

இனிதான் ஆட்டம் தொடங்க வேண்டும். அதற்குள்ளேயே ஏன் கூச்சல்களும் 
அரற்றல்களும்?

                                                 நன்றி: தமிழ் ஹிந்து

மதுரை  தல்லாகுளம் NFTE-BSNL CSC கிளை +  BSNLEU CTO கிளை இணைப்பு

மாநில துணைச் செயலர் தோழர் ராபர்ட்ஸ், கோவை சிறப்புரை 

NFTE BSNL TAMILNADU CIRCLE

மாநில செயற்குழு அறிவிப்பு



தமிழக அரசு பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு


தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட 9 பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர்கள், உயரதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையினை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கார்ப்பரேஷன், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை, அதாவது 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும், லாபம் 2 ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 விழுக்காடும் வழங்கப்படும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
மொத்தத்தில், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 240 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட 9 பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்குவது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர்கள், உயரதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையினை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கார்ப்பரேஷன், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை, அதாவது 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும், லாபம் 2 ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 விழுக்காடும் வழங்கப்படும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
மொத்தத்தில், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 240 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 


காங்கிரஸ் எம்.பி. மசூத் தகுதி நீக்கம்

குற்ற வழக்கில் தண்டனை பெற்ற காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ரஷீத் மசூத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள், உடனடியாக தங்களின் பதவியை இழப்பார்கள் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பதவி இழக்கும் முதல் அரசியல்வாதி இவர்தான்.
இதன் தொடர்ச்சியாக, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி.க்களான லாலு பிரசாத் யாதவ், ஜகதீஷ் ஷர்மா ஆகியோரும் விரைவில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
முன்னதாக, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கில் ரஷீத் மசூத்துக்கு (67) டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
1990-ம் ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக ரஷீத் மசூத் பதவி வகித்தார். அப்போது திரிபுரா மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மத்திய அரசின் இடங்களில் தகுதியில்லாத மாணவர்கள் சேர்ந்து படிக்க அவர் முறைகேடாக அனுமதி அளித்தார். இதில், இருவர் ரஷீத்தின் உறவினர்கள்.
ரஷீத் மசூத் மீது ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைகள் சட்டப் பிரிவு 120 பி (குற்றச் சதி), 420 (ஏமாற்றுதல்), 468 (மோசடி) உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த செப்டம்பர் 19-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவசரச் சட்டம்
வழக்குகளில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தண்டனை பெற்றாலும், அவர்கள் உயர் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்த பின், தங்களின் பதவியில் தொடரலாம் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த ஷரத்தை நீக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 10-ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள், உடனடியாக தங்களின் பதவியை இழப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த அவசரச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், அவசரச் சட்டம் ஒன்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரத்தில் தலையிட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அந்த அவசரச் சட்டத்தைக் கிழித்து எறிய வேண்டும் என்று வெகுண்டெழுந்தார். அதன் தொடர்ச்சியாக, அந்த அவசரச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Sunday 20 October 2013

'தி இந்து' எக்ஸ்ளூசிவ்: ஈரோடு வீட்டுவசதி வாரிய அதிகாரி நடத்திய பேரம்: 30 நிமிடத்துக்கு மேல் ஓடும் வீடியோ ஆதாரம் சிக்கியது

எஸ். கோவிந்தராஜ்
Comment (7)  ·   print   ·   T+  
  • வீடியோ காட்சியில் பேரத்தின்போது, உதவி செயற்பொறியாளர், பழனிசாமி மற்றும் நிர்வாக இயக்குனரின் உறவினர் என்று சொல்லப்படும் மற்றொரு பழனிசாமி.
    வீடியோ காட்சியில் பேரத்தின்போது, உதவி செயற்பொறியாளர், பழனிசாமி மற்றும் நிர்வாக இயக்குனரின் உறவினர் என்று சொல்லப்படும் மற்றொரு பழனிசாமி.
  • ஈரோடு சம்பத் நகரில் வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளி.
    ஈரோடு சம்பத் நகரில் வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளி.
  • வீடியோ காட்சியில் பேரத்தின்போது, உதவி செயற்பொறியாளர், பழனிசாமி மற்றும் நிர்வாக இயக்குனரின் உறவினர் என்று சொல்லப்படும் மற்றொரு பழனிசாமி.
    வீடியோ காட்சியில் பேரத்தின்போது, உதவி செயற்பொறியாளர், பழனிசாமி மற்றும் நிர்வாக இயக்குனரின் உறவினர் என்று சொல்லப்படும் மற்றொரு பழனிசாமி.

வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்பது தொடர்பாக வாரியத்தின் அதிகாரியும் மற்றும் உயர் அதிகாரியின் உறவினராக அறிமுகப்படுத்திக் கொள்பவரும், பள்ளி நிர்வாகி ஒருவருடன் நடத்தும் பேரம் குறித்த வீடியோ பதிவுகள், 'தி இந்து' நாளிதழுக்கு கிடைத்துள்ளன.
வாரியத்தில் நிலம் மற்றும் கட்டிடங்களை விற்பதில் நடக்கும் முறைகேடுகள் குறித்து சர்வசாதாரணமாக விவாதிக்கப்படுவதும் அந்த வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளன.
வீட்டுவசதி வாரியத்தில் புதிய வீடு, ஒதுக்கீடுகள் மூலம் கல்லா கட்டிவந்தவர்களின் கவனம் தற்போது, வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டிடங்களை விற்பதில் திரும்பியுள்ளது. இவ்வாறு விற்பனைக்காக உள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்களை, குறைந்த விலையில் பெற்றுத்தருவதாகக் கூறி, மாநிலம் முழுவதும் ஒரு கும்பல் களமிறங்கியுள்ளது.
அமைச்சருக்கு வேண்டியவர், வாரியத் தலைவருக்கு வேண்டியவர், உயர் அதிகாரியின் சொந்தக்காரர் என பல பெயர்களில் அவதாரம் எடுத்துள்ள இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், பல இடங்களைப் பற்றி பேரம் நடத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
பகிரங்கமாக நடந்த பேரம்!
ஈரோடு சம்பத் நகரில் வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில், வாடகைக்கு இயங்கிவரும், ஒரு தனியார் பள்ளிக்கு அந்த நிலத்தை சொந்தமாக்க பேரம் நடந்துள்ளது. ஈரோடு வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவரும், வாரியத்தின் நிர்வாக இயக்குநரின் உறவினர் என்று சொல்லப்படும் ஒருவரும், பள்ளி நிர்வாகியுடன் பேரம் நடத்தி இருக்கிறார்கள். இந்த பேரம் குறித்த முழு விவரமும் வீடியோ பதிவாக நமது கைக்கு கிடைத்திருக்கிறது.
அதிகாரி ஒருவர், தனியார் ஒருவருக்கு நிலத்தை விற்க காட்டும் அக்கறையும், நடைமுறையில் வீட்டுவசதி வாரியத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும் அந்த வீடியோ காட்சிகளில் அப்பட்டமாக விவாதிக்கப்படுகிறது.
பேரம் பேசிய வாரிய அதிகாரி வீடியோ விவரங்களுக்குள் செல்வதற்கு முன்பாக ஒரு சிறு ஃபிளாஷ் பேக்.. ஈரோடு சம்பத் நகரில் வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில், கடந்த, 1997-ம் ஆண்டு முதல், தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலத்தை விற்பனை செய்ய வீட்டுவசதி வாரியம் பள்ளி நிர்வாகத்துக்கே முன்னுரிமையும் கொடுத்தது.
இதன்படி, சுமார் 24,000 சதுர அடி பரப்பு கொண்ட இந்த நிலத்தை, சதுர அடி 1,500 ரூபாய்க்கு பள்ளி நிர்வாகத்துக்கு விற்க, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே சென்னை வீட்டுவசதி வாரிய அலுவலகத்துக்கு குறிப்பு அனுப்பப்பட்டது. இதற்கி டையே, இதே இடத்துக்கு சதுர அடி, 3000 ரூபாய் என விலை நிர்ணயித்து, மீண்டும் ஒரு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், அந்த இடத்தை உங்களுக்கு சாதகமாகப் பேசி முடித்துத் தருகிறேன் என்று ஈரோடு வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளர் பழனிசாமி பள்ளி நிர் வாகியை தன்னிச்சையாக அணுகியதாகக் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை விவரங்கள்தான் இப்போது வீடியோ ஆவணமாக சிக்கி இருக்கிறது.
வீடியோவில் என்ன?
அந்த இடத்தை பள்ளி நிர்வாகிக்கு பெற்றுத்தர ஒவ்வொரு மட்டத்திலும் செய்யவேண்டிய, 'பார்மாலிட்டீஸ்' குறித்தும், என்ன காரணத்தால் வாரியத்தால் தாமதம் ஆகிறது என்பது குறித்தும் வாரிய அதிகாரி விளக்குவது வீடியோவில் பதிவாகி உள்ளது. அத்தோடு, 24,000 சதுர அடி கொண்ட மற்றொரு நிலத்தை வாங்குவதற்கான 'வழிமுறை'களையும் விளக்குகிறார் அந்த அதிகாரி. அந்த இடத்தை பள்ளி நிர்வாகத்துக்கு வாங்கித் தருவதாகவும், அந்த இடத்தில் பில்டர் மூலம் கட்டிடம் கட்டி மூன்று கோடி ரூபாய் அதிக விலை வைத்து விற்கலாம் என்றும், உதவி செயற் பொறியாளர் பழனிசாமி பள்ளி நிர்வாகி பாலகுமாரிடம் பேரம் பேசுகிறார்.
பேச்சுவார்த்தையின் முடிவில், வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர் செல்லமுத்துவின் மனைவி வழி உறவினர் என பழனிசாமியால் அறிமுகப்படுத்தப்படும், மற்றொரு பழனிசாமியும் பேரத்தில் பங்கேற்கிறார். ஊழல் வாக்குமூலம் 30 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சியில், சில உரையாடல்களை குறிப்பிட்டாலே, வாரிய நடைமுறைகள் எப்படி உள்ளன என்பது விளங்கும். வாரியம் குறிப்பிடும் தொகையை செலுத்தி, நியாயமாக ஒரு ஒதுக்கீடு பெற வேண்டுமானால்கூட, அதற்கான, 'பார்மலிட்டீஸ்' குறித்து உதவி செயற்பொறியாளர் பழனிசாமி பிட்டுப் பிட்டு வைக்கும் விஷயங்கள் பகீர் ரகம்.
அந்த உரையாடல்களின் முழு விவரமும் நாளைய 'தி இந்து'வில்…