Tuesday 28 April 2015



பெருந்திரள் பட்டினிப்போர்
29-04-2015 அன்று
CGM அலுவலகம்(தழிழ் நாடு) முன்பு இயக்க மாண்பை காப்போம்..

Friday 24 April 2015



வன்மையாக கண்டிக்கின்றோம்.

சென்னை தொலைபேசி மாநிலச் செயலர் தோழர் சி.கே. மதிவாணன் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஊழியர் மீது கைது நடவடிக்கை கோரி இன்று 24/04/2015 அன்று “ கண்டன் ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை தொலைபேசி முன்பாக நடைபெற்றது. தோழர். பொன்.தேவராஜ் தலைமை தாங்கினார்கள். தோழர் வி. முத்தையன் BABL , தலைவர் AITUC,  இரா. தங்கராஜ் முன்னால் மாவட்ட செயலர் CPI, கண்டன உரை நிகழ்த்தினார்கள். உடன் தோழர்கள் இரா.செல்வராஜு, தி.மு.பழனி, எம்.நீலக்ண்டன், எம். அயோத்தி, நா. பாலகிருஷ்ணன், ஜே. சுப்ரமணியன் மற்றும் கே. சிவராஜன் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றனர்.





Thursday 23 April 2015

 

கண்டிக்கிறோம்



தோழர் மதிவாணன் அவர்களை போராட்டத்தில் பங்கேற்காத ஒரு ஊழியர் 22.04.2015 அன்று கத்தியால் தாக்கியிருக்கிறார். காட்டுமிராண்டித்தனமான
இச்செயலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

நன்றி- வாழ்த்துக்கள்

இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.
27.04.2015 அன்று தொலைத்தொடர்புத்துறையின் செயலாளர் நமது தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நமது போராட்டம் வீண் போகாது.
நிச்சயம் போராட்டம் பலன் தரும் என நம்புகிறோம். தலைவர்கள் அறிவித்தபடி நமது கடமையைச் செய்து விட்டோம். இனி அவர்கள் கடமையைச் செய்வார்கள்.
தரைவழித்  தொலைபேசியில்  இரவு நேர அழைப்புகள் இலவசம் பி.எஸ்.என்.எல்.

By dn, புது தில்லி

First Published : 23 April 2015 05:06 PM IST

     

நாடு முழுவதிலுமுள்ள அனைத்து நிறுவன தொலைபேசி, செல்லிடப்பேசிகளுக்கு , இரவு நேரத்தில் தங்களது நிறுவனத் தரை வழித் தொலைபேசி மூலம் அழைக்கும் சேவையை மே 1ஆம் தேதியிலிருந்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் இலவசமாக வழங்க உள்ளது.இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எங்களது தரைவழித் தொலைபேசி மூலம், நாடு முழுவதும் உள்ள அனைத்து செல்லிடப்பேசி, தொலைபேசி நிறுவனத்திற்கும் மேற்கொள்ளும் இரவு நேர அழைப்புகளை,மே 1ஆம் தேதியிலிருந்து இலவச அழைப்பு சேவையாக பி.எஸ்.என்.எல் வழங்க உள்ளது.இந்தத் திட்டத்தின்படி பி.எஸ்.என்.எல். நிறுவன தொலைபேசியிலிருந்து இரவு 9 மணியிலிருந்து காலை 7 மணிவரை மேற்கொள்ளும் அழைப்புகள் இலவச அழைப்பாக வழங்கப்படும்.

கிராமம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில், தரைவழித் தொடர்பு சேவையில் இணைப்பு பெறப்பட்ட குறிப்பிட்ட திட்டங்களில், தரைவழித் தொடர்பு சிறப்புத் திட்டங்கள்,  அகல அலைவரிசை இணையத்துடன் கூடிய தரைவழித் தொடர்பு திட்டங்கள் என அனைத்து வகையான திட்டங்களும் இரவு நேர இலவச அழைப்பு சேவைத் திட்டத்தின்  கீழ் கொண்டுவரப் படுகிறது என்று அந்த பி.எஸ்.என்.எல். அதிகாரி தெரிவித்தார்.