Friday 18 October 2013

நீரா ராடியா 'டேப்' வெளிப்படுத்தும் தகவல்களில் பெரும் முறைகேடு: சி.பி.ஐ., விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு



அரசியல் தரகர், நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலில், பல விவகாரங்கள் உள்ளன. '2ஜி' விவகாரம் மட்டுமின்றி, அரசியல், கம்பெனி விவகாரங்கள் உட்பட பல முறைகேடுகள் தொடர்பான அம்சங்கள் அடங்கியுள்ளதால், அது குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது, பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும், இடைத்தரகராக செயல்பட்டவர் நீரா ராடியா. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெளியாகி, அந்தப் பிரசனை வலுவடைந்ததும், நீரா ராடியாவின் பன்முகத் தொடர்பும், அதில் நடந்த விவாதங்களும், நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பின.நீதிபதி, ஜி.எஸ்.சிங்வி, நேற்று தன் உத்தரவில் கூறியதாவது: நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலின் சாராம்சத்தை பார்த்த மாத்திரத்தில், பெரும் முறைகேடு நடந்து இருப்பது தெரிகிறது. தனி நபர்கள், அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு, தங்களின் சுய லாபத்திற்காக, முறைகேடான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அறிய முடிகிறது. அரசு அதிகாரிகளுடன் தனியார் நிறுவனங்கள் சேர்ந்து கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டது, வரம்பை மீறி, அளவுக்கு அதிகமாக சட்டத்தை தாண்டி செயல்பட, அதிகாரம் படைத்தவர்களின் தூண்டுதல் இருந்தது என்றும், இதில் உள்ள தகவல்கள் காட்டுகின்றன. கிரிமினல் செயல்கள் நடந்திருப்பதை இவை காட்டுகின்றன. சுரங்கம் குறித்த விஷயங்களை கனிம வளத்துறையும், மற்ற சில விஷயங்களை ஊழல் கண்காணிப்பு துறையும் ஆய்வு செய்ய வேண்டும். இதில் உள்ள நீதித்துறை சம்பந்தப்பட்ட விஷயங்களை, தலைமை நீதிபதி முடிவு செய்ய கேட்டுக் கொள்கிறோம். மற்ற விஷயங்களில் அடங்கிய முறைகேடுகளை, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். இரண்டு மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், தொலைபேசி உரையாடல் தொடர்பான எழுத்துப்பூர்வமான ஆவணங்களை, சிறப்பு குழு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக, சிறப்பு குழுவை விரிவுப்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
 இந்த வழக்கின் அடுத்த விசாரணை, டிசம்பர் 10ம் தேதி நடைபெறும். இவ்வாறு நீதிபதி தன் உத்தரவில் கூறினார்.

No comments:

Post a Comment