Sunday 9 February 2014

ஓய்வுபெறும் வயது 65ஆக உயர்வு????


 சமீபத்தில் கூடிய பாராளுமன்ற குழு மத்திய அரசு 
 
ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தலாம் 
 
என சிபாரிசு செய்துள்ளதாக அறிந்துள்ளோம். இதுபற்றி அரசு 
 
முடிவெடுக்கும்முன் இன்றைய வேலையில்லா திண்டாட்டம் 
 
எந்த அளவுக்கு இளைஞர்களை பாதித்துள்ளது என்பதனை 
 
கணக்கில் எடுக்கும் என நினைக்கிறோம். ஆனால் ஒரு 
 
தொழிற்சங்கம் என்றமுறையில் நாம் இதனை கடுமையாக 
 
எதிர்க்கிறோம்.அதுமட்டுமல்லாமல் மூன்று மற்றும் நான்காம் 
 
பிரிவு ஊழியர்களுக்கு உள்ள ஆளெடுப்புத் தடைச் 
 
சட்டத்தையும் திரும்பபெற வலியுறுத்துகிறோம்.  இதனால் 
 
30வருடங்களாக நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். அதேபோல 
 
காசுவல் தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் 
 
என்ற கோரிக்கையும் எழுப்புவோம்.
 
தகவல்: NFTE காஞ்சி

No comments:

Post a Comment