சிலரின் வேடம் கலைந்தது., ஒற்றுமை நாடகமும் 
முடிந்தது.
 
   நமது மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை 11 
மணிக்கு
வேலூரில் துவங்கியது.
        மாநில செயலர் அறிமுக (ஒற்றுமைக்கு 
குந்தகம் விளைவிக்கும்
வகையில் அனைவரும் பேச வழி அமைத்துக்கொடுத்தார்) 
உரைக்குப்பின்,
பல மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், 
கீழ் கண்ட பொருள்களை
அஜண்டாவில் சேர்க்க வேண்டுகோள் 
விடுத்தனர்.
 
1.  மதுரை மாநில மாநாட்டில் 
தேர்ந்தெடுக்கப்படாமல், கொல்லைப்புற வழியாக
     உடலுக்கு தேவையற்ற 6 வது 
விரலைப்போல,
     6 சிறப்பு அழைப்பாளர்களை, (ரிட்டயர்டு 
தலைவர்கள் உட்பட) தேர்ந்தெடுத்தது,
     நமது சங்க அமைப்பு விதிகளுக்கு எதிரானது, 
எனவே அவர்கள் அறுவரும்
     தேர்ந்தெடுத்தது சட்டப்படியானதல்ல என்ற 
பொருளும்,
 
2.  நமது தமிழ் மாநிலத்தில் பல தோழர்களிடம் 
வசூல் செய்து,  பல லட்சம் ரூபாய்
     செலவு செய்து கட்டிய கட்டிடத்தில் நமது 
மாநில செயலர் குடியேற, சால்ஜாப்பு
     சொல்லி பல ஆண்டுகளாக மறுதலிப்பது,  நமது 
தோழர்கள் அனைவரையும் வருத்தப்பட    வைப்பதாக உள்ளது எனவே, மாநில செயலர் உடனடியாக, 
சங்க அலுவலகத்தில் குடியேற வேண்டும்
     என்ற அஜண்டாவும்,
 
3.  சின்னம்மாள் அறக்கட்டளை பற்றி பல மாநில 
செயற்குழு கூட்டங்களில் விவாதித்தும்
     யார் அதன் பொருப்பாளர்கள் என்பதை, 
திறையிட்டு  மூடி மறைப்பது ஏன்? என்ற   
     விவாத பொருளும், மாநில செயற்குழுவில் 
சேர்க்க, 
  
               பல தோழர்கள், மதியம் வரை சேர்க்க 
கோரியும், மாநில செயலர் பட்டாபிராமன்
ஒற்றை காலில் நின்று, மாநில செயற்குழு சிறப்புடன் 
நடைபெறாமல் கவனமாக பார்த்துகொண்டார்.
 
              மாநில செயலர் பட்டாபிராமன் 
துவக்கவுரை தொடங்கி,  முடிவுரை வரை நமது அகில இந்திய துணைப்பொதுச்செயலர் தோழர் 
மதிவாணனையும்,  சம்மேளன செயலர்
தோழர் ஜெயராமனையும், கடுமையான அவதூறு செய்யும் 
பிரச்சாரமாகவே இருந்தது.
 
              இந்த மாநில செயற்குழுவின் 
நோக்கமே!!! நமது சங்கத்தலைவர்களை, தரக்குறைவாக
விமர்சிக்க போடப்பட்டதோ? வேண்டும் என்றே வேலூரில் 
திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதோ? என்று சாதாரண தோழர்கள் நினைக்கும் அளவிற்கு 
இருந்ததது.
 
            சங்கத்தில் ஒற்றுமையான 
செயல்பாட்டிற்கு குந்தம் விளைந்திடவே,  ஓய்வு பெற்ற சிலரும், திட்டமிட்டு களம் 
இறங்கி  ஒற்றுமை ஏற்படாமல் உறுதியாக பார்த்துகொண்டனர்.
            இதற்கு மாநில செயலர் பட்டாபிராமன் 
மிகவும்  உறுதுணையாக இருந்தார்.
 
           செயற்குழு இறுதிவரை,  நமது சமேளன 
செயலர் தோழர் ஜெயராமன் அமைதியாக
 இருந்து வாழ்த்துரை வழங்கினார்.தோழர்கள் 
O.P.குப்தா, ஜெகன் அவர்களின் கொள்கை வழித்தோன்றல், தான் தான் என்பதை இதன் மூலம் 
நிரூபித்தார்.
 
No comments:
Post a Comment