Sunday 29 September 2013

   சொஸைட்டி தலைவர் மீது 

    வன்முறையை ஏவிய   BSNLEU குண்டர் படை !


   சொஸைட்டி நிலத்தில் அழகான அடுக்கு மாடி கட்டி ஊழியர்க்கு பிரித்து அளிக்க வேண்டும் என்ற சொஸைட்டி டைரக்டர்கள் குழுவின் முடிவை ஏற்க  மனமில்லாத BSNLEU  சங்க மாநிலத் தலைமை,  இன்று  கூடிய உறுப்பினர் பேரவை கூட்டத்திற்கு  தமிழகம்  எங்கும் இருந்து  பல பேருந்துகளில் உறுப்பினர்களோடு குண்டர் படையையும் கொண்டு வந்து இறக்கியது. 
  
            அதன் இலக்கு சொஸைட்டி தலைவர் திரு. S.வீ ரராகவன்.

BSNLEU சங்கத்தின் ஆணையை ஏற்று, தனது  மனதுக்கு ஒத்து வரவில்லை என்றாலும், அடுக்குமாடி திட்டத்தை எதிர்த்து முதலில் நடந்த டைரக்டர்கள்  கூட்டத்தில் வாக்களித்தார் திரு. வீ ரராகவன். 

ஆனாலும் பெரும்பான்மை இல்லை.... 5:5  என்று சமமான   நிலைமை....

ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத BSNLEU சங்கத் தலைமை, அவரை மேலும் கூடுதலாக தலவருக்கான  Casting Voteஐ  போட்டு மைனாரிடியை மெஜாரிட்டி ஆக்க நிர்பந்தித்து ஆணை இட்டது.

   அதனை ஏற்க மறுத்த திரு வீரராகவன் அவர்களை மிரட்டி பார்த்தது.. 

அதற்கு அவர் அடிபணியாமல், RGBக்கு இடையில் நடந்த டைரக்டர்கள் கூட்டத்தில் RGB  உறுப்பினர்களின்  கருத்துக்களையும்  உணர்வுகளையும் கணக்கில் கொண்டு அடுக்குமாடி கட்ட வாக்களித்தார்.

சொஸைட்டி தனது  கட்டுப்பாட்டில் இருந்து கை நழுவி போவதை பொறுத்துக் கொள்ள முடியாத BSNLEU மாநிலத் தலைமை, வன்முறையை ஏவி அவரை வழிக்கு கொண்டுவர  முடிவு எடுத்து ஆட்களைத்  திரட்டியது.

   இன்று நடந்த உறுப்பினர்கள் பேரவை கூட்டத்தில் யாரும் எதிர்பாராத வேளையில், திடீர் தாக்குதலில் இறங்கியது குண்டர் படை. 

மேடையில் இருந்த திரு. S.வீரராகவன்  மீது கடும் தாக்குதலில் ஈடுபட்டது அந்த குண்டர் படை. 

 விசாரணையில் அவரை கடுமையாக தாக்கியவன் சொசைட்டி உறுப்பினரோ,  BSNL ஊழியரோ இல்லை, CITU சங்க போக்குவரத்து துறையை சார்ந்தவன் என்பது தெரிய வந்து  உள்ளது.

     BSNLEUவின் வன்முறைத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். 

திரு எஸ்.வீ ரராகவன் விரைந்து நலம் பெற வாழ்த்துகிறோம் !!     


                                         முடிவு : 

வருங்கால  டைரக்டர்கள் குழு கீழ்க்கண்டவாறு அமையும் :

   தமிழகத்திற்கு                              :    10 டைரக்டர்கள்
  சென்னை தொலைபேசிக்கு  :     8 டைரக்டர்கள்

இரண்டுக்கும் பொதுவானது   :     3 டைரக்டர்கள்  (2 மகளிர், ஒரு தலித்    
                                                                                                             பிரிவைச் சார்ந்தவர்)  

       தகவல்: கோவை வலைதளம்
  

  

No comments:

Post a Comment