Friday 13 September 2013

                             அன்றும் இன்றும் !!

     C.K.M - Always a True Cruseder,not a Jalra

   அமைச்சர் ராஜா காலத்தில் BSNLலிடம் ரூ.40,000 கோடி கையிருப்பாக இருந்தது. இதை கபளீகரம் செய்து BSNLஐ நலிவான நிறுவனமாக்க ராஜா முடிவெடுத்து செயல்பட்டார்.

   BSNL, MTNLக்கு ஒத்து வராத ஸ்பெக்ட்ரத்தை, தேவையேயின்றி BSNL வாங்க வைத்தார்.ஆனால் ஏலம் விட்டபிறகு வரும் அதிக விலையைத்  தரவேண்டும் என்று அநியாயமாக ஒரு கண்டிஷனை போட்டார்.

அப்போதே தைரியமாக இதை அம்பலப்படுத்தியவர்  தோழர் C.K.மதிவாணன் மட்டுமே. 

குறிப்பாக ஒரே அங்கீகாரச் சங்கத்தின் பொதுச்செயலராக இருந்த VAN நம்பூதிரி யூனைடேட் போரம் சார்பாக அமைச்சர் ராஜாவுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து கடிதம் கொடுத்தார்.  

அமைச்சர் ராஜா விலகி, சிறைக்கு சென்றபின். நல்ல பிள்ளையாய் மாறிய நம்பூதிரி, அபிமன்யூ உள்ளிட்ட Forum தலைவர்களும் உண்மையை உணர்ந்து தேவையில்லாத ஸ்பெக்ட்ரத்தை சரண்டர் செய்ய வேண்டும் , அந்த அநியாய கட்டணத்தை அரசு திருப்பித் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்க உடன் பட்டனர்

இன்று GoM திருப்பித் தர முடிவெடுத்து விட்டது வரவேற்கத் தக்கது..

நன்றி: கோவை NFTE

No comments:

Post a Comment