Friday 6 September 2013


                                                   

புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உண்மை கண்டறியும் சோதனைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மறுத்துவிட்டதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், மத்திய தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்பட பலர் மீது டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் முதலில் விசாரணை அதிகாரியாக செயல்பட்ட சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் சஹால், நேற்று போலீஸ் தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். 
அவரிடம் குறிப்பாணை ஒன்றை காட்டி அரசு தரப்பு வழக்கறிஞர் விசாரித்தபோது, ஆ.ராசாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக சம்மதம் கோரி தான் அனுப்பிய குறிப்பாணைதான் அது என்று ஒப்புக்கொண்டார்.

ஆனால், உண்மை கண்டறியும் சோதனைக்கு ஆ.ராசா உட்பட மறுத்துவிட்டதாகவும், அப்போது அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment