Friday 13 February 2015

      காற்றில் பறக்கும்  தமிழக பாரம்பரியம் !
                                    ( நூரு போயி லட்சம்  )

தமிழகத்தில் E-3  மற்றும் Line staff and Group D சங்கங்கள் இணைந்து NFTE-BSNL உருவான போது நாம் ஒரு கொள்கை நிலைபாட்டை உருவாக்கினோம். 

மாநிலச் செயலர்  E-3 தோழர் என்றால் மாநிலத் தலைவர் போன் மெக்கானிக் தோழர் என்று.

2003ல், திருநெல்வேலி மாநில மாநாட்டின்போது, போன் மெக்கானிக் தோழர்தான் மாநிலச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் 
என்று பிரச்சாரம் செய்தனர் பட்டாபி  அணியினர் .

2007ல், கோவை மாநில மாநாட்டில் பட்டாபிராமன்  மாநிலச் செயலர் என்றவுடன் அந்த நிலைபாட்டை அம்போ என்று விட்டுவிட்டு  தலைவர் லைன் ஸ்டாப் என்றனர்.

மதுரை மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சேலம் மாவட்டச் சங்க  நில அபகரிப்பு புகழ் நூருக்கு பதிலாக  லட்சம் என்று சென்னையில் பூட்டிய அறையில்  முடிவெடுத்ததாக அறிவித்துள்ளனர்.

 இது ஜனநாயகரீதியாக நடந்த தேர்தல் அல்ல. கோஷ்டி முடிவு !!

  பட்டாபி அணியிலேயே கூட நல்ல தரம் வாய்ந்த போன் மெக்கானிக் தோழர் ராப்ர்ட்ஸ் உள்ளார். 

1982ல் சேலம் மாநில மாநாட்டில் தோழர் சி.கே.,மதிவாணன் அவர்களால் அடையாளம் காணப்பட்டு மாநில சங்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப் பட்டவர், மாவட்டச் செயலராக, மாவட்டத் தலைவராக, மாவட்ட பொருளராக  என்று  பல பொறுப்புகளை ஏற்ற அனுபவம் வாய்ந்த நிதானமான தோழர் அவர்.

ஒற்றுமைக்கு குரல் கொடுக்கும் அவரை ஓரம் கட்டி விட்டு,  டெலிபோன் ஆபரேட்டரான, விரைவில் ஓய்வு பெறப் போகும் லட்சத்தை நியமிப்பது ஏன் ? மாநிலச் செயலர் பட்டாபிராமனும் டெலிபோன் ஆபரேட்டர்,  லட்சமும் டெலிபோன் ஆபரேட்டர். இது கேடர் உணர்வை கிளப்பி விடாதா ?

  மாநில துணைத் தலைவராக இருக்கும்போதே, மூத்த தோழர் கோவை சுப்பராயன் அவர்களை சென்னை செயற்குழுக் கூட்டத்தில்," மதுரை வரும்போது கையையும்  காலையும் உடைப்பேன்"  என்று 
மதுரை முத்து பாணியில் மிரட்டிய லட்சம்,  தலைவரானால் எப்படி நர்த்தனம் ஆடுவார் !

 எந்த நிலப் பிரச்சனைக்காக நூரு விலகினாரோ, அதே தவறுக்கு  உடந்தையாக இருந்தவருக்கு துணைச் செயலர் பதவியா ! . 

தகவல்: NFTE-கோவை.

No comments:

Post a Comment