Tuesday 17 November 2015

தேவை

சுயபரிசோதனை
போனஸ் பற்றி இரண்டு செய்திகளை வெளிடிட்டிருந்தோம். அவை சிலருக்கு கோபத்தை  உருவாக்கியதாக அறிந்தோம்.
யாரையும் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படவில்லை. ஊழியர் மனங்களில் உள்ள ஆதங்கங்களை வெளிப்படுத்துவது மட்டுமே நமது நோக்கமேயன்றி வேறேதுமில்லை.
போனஸ் பெற நமது NFTE இயக்கம் மேற்கொண்ட முயற்சிகளை நாம் அறிவோம்.
FORUM  சார்பாக ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற இயக்கங்களை நடத்தினோம்.
அதற்குப் பிறகு நமது இயக்கத்தின் சார்பாக போனஸ் தர வலியுறுத்தி நிர்வாகத்துக்கு ஒரு கடிதம் தரப்பட்டது.
மத்திய செயற்குழுவில் போனஸ் பிரச்னை  தலைவர்களால் விவாதிக்கப்பட்டு முடிவும் எடுக்கப்பட்டது.
அந்த முடிவையும் நமது சங்கம் நிர்வாகத்துக்குத் தெரிவித்தது
பூஜை முடிந்தது.
தீபாவளியும் முடிந்தது.
போனஸ் இன்னும் வரவில்லை.
கொடுபடா ஊதியம்
உச்ச நீதிமன்ற ஆணை
“DPE உத்தரவு
போன்ற புறச்சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக இருந்தன.
800 கோடி கூடுதல் வருவாய் என்ற அகச் சூழ்நிலயும் சாதகமாக இருந்தது.
இச்சூழ்நிலையில்,
ஏன் போனஸ் பெற முடியவில்லை?
என்பது குறித்து ஒரு சுயபரிசோதனை தேவை என்பதே நம் விழைவு.
இதை யார் செய்வது?
மத்திய சங்கத்துக்கு வழிகாட்டும் நமது தமிழ் மாநிலச் சங்கம் இந்த சுயபரிசோதனையைச் செய்து  மத்திய சங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என தோழமையுடன் வேண்டுகிறோம்.

தகவல்: ஈரோடு வலைதளம்.

No comments:

Post a Comment