Saturday 20 April 2013

வென்றது
யார்?
தோழர் அபிமன்யு தன்னுடைய வெப் சைட்டில் 23/03/2013 ஒரு கட்டுரை எழுதினார். அதில் BSNLEU சங்கம் 1,14,534 மெம்பர்களை வைத்திருப்பதால் 51 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகள் வாங்கி ஒரே சங்கமாக வந்துவிடுவோம் என்று கூறியுள்ளார். அந்தோ பரிதாபம் அவர் வாங்கிய ஓட்டுகள் 99,380 மட்டுமே. இதிலிருந்து BSNLEU-வின் 15,154 மெம்பெர்கள் அச்சங்கத்திற்கு வாக்களிக்கவில்லை என தெரியவருகிறது.
அவருடைய கூற்றுபடி பார்த்தால் NFTE 45,000 மெம்பெர்களைத்தான் வைத்துள்ளது. ஆனால் வாங்கிய ஓட்டுகள் 61,915. இந்த கணக்குபடிப் பார்த்தால் மற்ற சங்கங்களிருந்தும் (BSNLEU உட்பட) NFTE க்கு சுமார் 16,915 பேர் ஓட்டு போட்டு உள்ளனர். இதிலிருந்து உண்மையாக யார் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிய வருகிறது.
அதேபோல அவர் கொடுத்த புள்ளிவிபரப்படி சென்னை தொலைபேசியில் BSNLEU 3262 மெம்பெர்களை வைத்திருந்தும் பெற்ற ஓட்டுகளோ 3041 மட்டுமே.இதிலிருந்து சுமார் 200 BSNLEU மெம்பெர்கள் அச்சங்கத்திற்கு ஓட்டளிக்கவில்லை என்பதும் தெரிகிறது. அதுவும் பணம், D.M.K ஆதரவு பத்திரிக்கை மூலம் பொய்ப் பிரச்சாரம் இவைகளை புறந்தள்ளி நமக்கு வாக்களித்துள்ளனர். இதன் மூலம் சென்னை தொலைபேசியில் NFTE சங்கம் தன்னுடைய மெம்பர்களைவிட அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது நிரூபணம் ஆகி உள்ளது.
இப்போது தெரிகிறதா யார் வெற்றி பெற்றது என்று?
நன்றி: சென்னை தொலைபேசி மாநிலச்சங்கம்

No comments:

Post a Comment