Saturday, 3 May 2014

                                                 மே தின பொதுக்கூட்டம்

ரிஷிவந்தியம்,மே,02;

விழுப்புரம் மாவட்டம்,திருக்கோவிலூரில் ஏஐடியூசி, சிஐடியூ தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஏஐடியூசி மாவட்டச் செயலர் ஆ.சௌரிராஜன், சிஐடியூ மாவட்டத் தலைவர் பி.குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஏஐடியூசி மாநில துணைத் தலைவர் சி.கே.மதிவாணன், சிஐடியூ மாநிலச் செயலர் கே.திருச்செல்வன் ஆகியோர் உரையாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.ராமசாமி, கல் உடைக்கும் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் எம்.ராஜேந்திரன், இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்டச் செயலர் ஆ.வளர்மதி,மாவட்டக்குழு உறுப்பினர் டி.கோவிந்திராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்






மே தினம்
01-05-2014 அன்று திருவண்ணாமலையில் தொலைபேசி நிலையதில் மே தினம் சிற்ப்பாக கொண்டாடபட்டது. சங்க வேறுபாடு இன்றி, காழ்ப்புனற்சி இன்றி தோழர்களும், தோழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  


தோழர் எம். ரேணு அவர்கள் மே தின முழக்கங்களை வின்னதிர எழுப்புகிறார்.
 




   மாலை பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

 

NFTE-BSNL தோழர்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கு பெற்றனர்.






AITUAITUC சார்பில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கு.லிங்கமுத்து சிறப்புரை ஆற்றினார்கள்.