Saturday 3 May 2014

                                                 மே தின பொதுக்கூட்டம்

ரிஷிவந்தியம்,மே,02;

விழுப்புரம் மாவட்டம்,திருக்கோவிலூரில் ஏஐடியூசி, சிஐடியூ தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஏஐடியூசி மாவட்டச் செயலர் ஆ.சௌரிராஜன், சிஐடியூ மாவட்டத் தலைவர் பி.குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஏஐடியூசி மாநில துணைத் தலைவர் சி.கே.மதிவாணன், சிஐடியூ மாநிலச் செயலர் கே.திருச்செல்வன் ஆகியோர் உரையாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.ராமசாமி, கல் உடைக்கும் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் எம்.ராஜேந்திரன், இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்டச் செயலர் ஆ.வளர்மதி,மாவட்டக்குழு உறுப்பினர் டி.கோவிந்திராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்




No comments:

Post a Comment