Tuesday 14 January 2014

பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆக உயர்வு

       2013-14 நிதியாண்டிற்கான பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆக 
 
உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் பி.எப் கணக்குக்கு 8.5 
 
சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது.
 
இந்நிலையில், பி.எப் வட்டியை அதிகரிக்க வேண்டும் என்று 
 
தொழிலாளர் சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. 
 
இதனையடுத்து பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 
சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவு நிதியை நிர்வகித்து வரும் 
 
இந்த அமைப்பு, தனது சேவையை மேம்படுத்தும் வகையில் நாடு 
 
முழுவதும் உள்ள 2,700 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 
 
மையங்களிலும் விரைவில் ஒரு புதிய கணினி மென்பொருளை 
 
பயன்பாட்டுக்கு கோண்டு வந்து அதன் மூலம் சேவை 
 
கண்காணிப்பை அதிகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 

No comments:

Post a Comment