Wednesday 21 August 2013

                                                                21-8-2013 
                                 இலக்கிய பேராசான் 
                            ஜீவா 107வது பிறந்த நாள்

                                      

           தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் ; சென்னை மாகாணத்திற்கு 
 " தமிழ்நாடு " என்று பெயர் சூட்ட வேண்டும் என்று சட்ட சபையில் முழங்கியவர் ஜீவா.

" ஜனசக்தி "யை தொடங்கி அதன் ஆசிரியராகவும் பொறுப்பேற்று தமிழக அரசியலில் தடம் பதித்துச் சென்றவர் ஜீவா.

தரமான இலக்கியத்தை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்வதற்காக ' தாமரை "இதழை தொடங்கியவர் ஜீவா.

அனைத்து முற்போக்கு கலைஞர்களையும் ஒன்றிணைப்பதற்காக "தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் " என்ற அமைப்பை உருவாக்கியவர் ஜீவா.

    இயக்க கட்டுப்பாடு என்பதை கண்ணிண் மணிபோல காத்தவர் தோழர் ஜீவா. ஒருமுறை கட்சி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தபோது, கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல எனக்கு மனமில்லை, ஆகவே கட்சி அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணியை எனக்கு தாருங்கள் ; அதை செய்கிறேன் என்று சொல்லி பணியாற்றியவர் ஜீவா.

தேசபக்தர்களுக்கும் சுயமரியாதை சிந்தனையாளர்களுக்கும் பொதுவுடமையாளர்களுக்கும் இன்றும் கலங்கரை விளக்கமாக திகழ்பவர் ஜீவா.

நன்றி: NFTE கோவை

No comments:

Post a Comment