Wednesday, 7 January 2015





தோழர்களே!!

இன்று 06-01-2015 குப்தாவின் நினைவினை போற்றும் விதமாக சென்னை தொலைபேசி மாநிலச் சங்கத்தின் சார்பாக தோழர்.ஓ.பி.குப்தாவின் சிலை திறப்புவிழாவும் அவரைப் பற்றி தோழர்.சுப்பராயன் (தமிழ் மாநில உதவிச் செயலர்) எழுதிய புத்தக வெளியீட்டு விழாவும் திருவள்ளூரில் மிகவும் 
விமர்சையாக நடைபெற்றது. 

மாநாட்டினை திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர்.தனபால் தலைமை ஏற்று நடத்தினார். தோழர்.சி.கே.ரகுநாதன் முன்னிலை வகுத்தார். 

தோழரின் சிலையினை மாநிலச்செயலர் சி.கே.மதிவாணன் விண் அதிரும் கோஷங்களுடன் திறந்து வைத்தார்.

தோழர்.குப்தாவை பற்றி சுப்பராயன் எழுதிய “தன்னிகரில்லா தலைவர்” என்ற நூலினை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தோழர்.அப்பாதுரை வெளியிட மாநிலத் தலைவர் தோழர்.எம்.கே.ராமசாமி பெற்றுக்கொண்டார்.

விழாவில் குப்தாவின் நினைவுகளை, அவர் தொழிலாளி வர்க்கதிற்கு ஆற்றிய நற்செயல்களை, போராட்டங்களை தலைவர்கள் மாலி, கடலூர் ரகு, எல்.சுப்பராயன், கே.வள்ளிநாயகம், சொசைட்டி தலைவர் வீரராகவன்,தோழியர்.அ.காந்தா, பரிமளம், காண்ட்ராக்ட் சங்க மாநிலச் செயலர் தோழர்.ஆனந்தன்,ஆகியோர் சிறப்புடன் பேசினர்.

விழாவில் குப்தாவை பற்றிய பட்டிமன்றம் புலவர் கோவி.செயராமன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர் தோழியர்கள் கலந்து கொண்டனர்.குப்தாவிற்கு நாட்டிலேயே முதன் முதலாக சிலை வைத்த பெருமையும் அதனை திறந்து வைத்த சிறப்பும் தோழர்.மதிவாணன் அவர்களை சாரும் என்றால் அது மிகை ஆகாது.மாநாட்டில் பேசிய மூத்த தோழர் கடலூர் ரகுவும் அதனை ஆமோதிக்கும் விதத்தில் பேசியது சாலச்சிறந்தது என அனைவரும் கூறினர்.

மாநாட்டின் சில முக்கிய நிகழ்வுகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்


































































நன்றி: NFTE காஞ்சி

Thursday, 1 January 2015



TODAY   01-01-2015  IN TIRUVANNAMALAI 20 YEARS SERVED BSNL EMPLOYEES ARE HONOURED BY S.SEKAR DIVISIONAL ENGINEER.